தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்குக்கு ஷாக் – அடுக்கடுக்கான முறைகேடுகள்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்குக்கு ஷாக் - அடுக்கடுக்கான முறைகேடுகள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்குக்கு ஷாக் - அடுக்கடுக்கான முறைகேடுகள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்குக்கு ஷாக் – அடுக்கடுக்கான முறைகேடுகள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் தற்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

ரேஷன் கடைகள்

தமிழகத்தில் அனைவருக்கும் உணவு வழங்கும் நோக்கத்தில் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டுதாரர்கள் இந்த உணவுப் பொருட்களை வாங்கியவுடன் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும். அதில் அவர்கள் பெற்ற பொருளின் பெயர், எடை மற்றும் விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கும். இதில் தற்போது வாங்கப்படாத பொருட்களும் வாங்கியதாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது என்று புகார் தெரிவிக்கின்றனர்.

Post Office சேமிப்பு திட்டம் – ரூ.34 முதலீட்டில் ரூ.5.32 லட்சம் வரை சலுகை! முழு விபரம் இதோ!

அதாவது குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருளில் சர்க்கரை மட்டும் வாங்கியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் வாங்கப்பட்டதாக குறுஞ்செய்தியில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பொருளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்களை கொண்ட மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும். இந்த மூட்டைகளில் 2 கிலோ குறைந்து மாதம் 15 ஆயிரம் டன் தானியம் குறைவாக பெறப்படுகிறது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

மேலும் இது தொடர்பாக உணவு துறை அதிகாரி கூறியதாவது, இந்த எடை குறைவு காரணம் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி என்று தெரிவித்துள்ளார். அதனால் கார்டு தாரர்களுக்கு குறைவான அளவில் வழங்கப்படுகிறது. இதனை பற்றி நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி கூறியதாவது, கிடங்குகளில் இருந்து சரியான அளவில் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தான் தங்கள் தவறை மறைக்க வேண்டும் என்று கிடங்குகளின் மீது குற்றம் சாட்டுகின்றனர். அதனால் அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களுக்கு சரியான எடை கொண்ட பொருட்கள் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!