தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை!
தமிழகத்தில் இருந்து தொடர்ந்து டன் கணக்கில் ரேஷன் அரிசியை பிற மாநிலங்களுக்கு கடத்தி வருகின்றனர். தற்போது அரிசி கடத்தலை தடுக்க அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றனர்.
ரேஷன் அரிசி:
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரிசியை கடத்தி கொண்டிருக்கின்றனர். இந்த அரிசியை பாலிஸ் போட்டு ஆந்திராவில் கிலோவுக்கு ரூ.40 என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 16 மாதங்களில் மட்டுமே 13 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும், அதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் மு.க ஸ்டாலினுக்கு ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
Exams Daily Mobile App Download
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கூட சென்னையில் இருந்து கர்நாடகாவிற்கு 17 டன் நியாய விலைக்கடை அரிசியை கடத்தி சென்ற போது போலீசாரிடம் பிடிபட்டனர். அரிசிக் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தது. ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டிய அரிசியை அதிகாரிகள் உதவியுடன் கடத்தியதாக குற்றவாளிகள் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்தனர். ஒரே இடத்தில் இருந்து எப்படி 17 டன் அரிசியை கடத்தியிருக்க முடியும் என தொடர்ந்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து அரிசி கடத்தப்படும் செய்தி அறிந்தும் கூட அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் சம்பள உயர்வு? 4% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு!
ரேஷன் கடைகளில் கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி வாங்க முடியும். அதையும் மீறி எப்படி அரிசியை டன் கணக்கில் கடத்தி கொண்டிருக்கின்றனர். ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உதவி இல்லாமல் கண்டிப்பாக இந்த கடத்தல் நிகழாது. எனவே ரேஷன் கடைகளில் ஏதேனும் முரண்பாடுகள் நடைபெறுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி கடத்தலை தடுக்க அனைத்து மாநிலத்தின் எல்லையிலும் வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.