சன் டிவி “தாலாட்டு” சீரியலில் களமிறங்கும் “செம்பருத்தி” சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!
ஜீ தமிழ் சீரியலில் ஒன்றான “செம்பருத்தி” சீரியலில் நந்தினியாக நடித்து வரும் மௌனிகா, சன் டிவி சீரியல் ஒன்றில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று (பிப்.3) முதல் அவர் நடித்த காட்சிகள் சீரியலில் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை மௌனிகா:
தமிழ் சின்னத்திரையில் பல வெற்றி சீரியல் நடிகர் நடிகைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை கடந்து சென்று கொண்டிருக்கும் “செம்பருத்தி” சீரியலில் வில்லி நந்தினியாக நடித்து வருபவர் நடிகை மௌனிகா. அவர் தற்போது சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “தாலாட்டு” சீரியலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தாலாட்டு சீரியலில் தாரா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
TN Job “FB Group” Join Now
தற்போது அந்த கதாபாத்திரத்தில் செய்திவாசிப்பாளர் மலர் நடித்து வருகிறார். மேலும் கிருஷ்ண ஸ்ருதி ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். மேலும் மலர் கதாபாத்திரம் கதையின் ஆணி வேராக வில்லியாக காட்டப்படுகிறது. அவர் சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இந்நிலையில் சில தனிப்பட்ட காரணங்களால் மலர் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 14% DA உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!
இன்று முதல் சீரியலில் தாராவாக நடிகை மௌனிகா நடிக்க இருக்கிறார். இவர் வானத்தை போல, ரெட்டை ரோஜா போன்ற சீரியலில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த சீரியலிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுக்க இருக்கிறார். மலர் மீண்டும் செய்தி வாசிப்பாளர் பணியை சன் தொலைக்காட்சியில் தொடர இருக்கிறார். இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் ஏன் இந்த சீரியலை விட்டு விலகினார் என்ற சரியான காரணம் தெரியவில்லை.