தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுப்பது உண்மை – சுகாதாரத்துறை செயலர் ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று சென்னையில் மட்டுமே 144 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கொரோனா:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரண்டு தவணைகளில் கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது வரைக்கும் தமிழகத்தில் 94 சதவீதத்தினர் முதல் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். மேலும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 75 சதவீதம் மக்கள் மட்டுமே செலுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் ஏர்டெல் நெட்ஒர்க் சேவைகள் திடீர் பாதிப்பு – பயனர்கள் அவதி!
கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேலான மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர். தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா பரவல் குறைவாக இருந்து வந்தது. ஆனால், தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் முடிந்தவரைக்கும் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லும்படியும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற கோரியும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
சென்னையில் நேற்று மட்டும் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாயிரத்துக்கு கீழ் இருந்த கொரோனா தொற்று கடந்த 2 நாட்களில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் உள்ள 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த மையத்திலுள்ள 245 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் பரவி வந்த BA4, BA5 ஆகிய உருமாறிய கொரோனா வகை வைரஸ் தற்போது தமிழகத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காரணத்தினால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும், மக்கள் கண்டிப்பாக இரண்டு தடுப்பூசியும் செலுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.