Airtel சிம் பயனர்களுக்கு ஷாக் ரிப்போர்ட் – 2022 இல் மீண்டும் ரீசார்ஜ் கட்டண உயர்வு?

0
Airtel சிம் பயனர்களுக்கு ஷாக் ரிப்போர்ட் - 2022 இல் மீண்டும் ரீசார்ஜ் கட்டண உயர்வு?
Airtel சிம் பயனர்களுக்கு ஷாக் ரிப்போர்ட் - 2022 இல் மீண்டும் ரீசார்ஜ் கட்டண உயர்வு?
Airtel சிம் பயனர்களுக்கு ஷாக் ரிப்போர்ட் – 2022 இல் மீண்டும் ரீசார்ஜ் கட்டண உயர்வு?

2021 ஆண்டு இந்தியாவில் அனைத்து நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்ந்தது. இதை தொடர்ந்து நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் இந்த ஆண்டு மீண்டும் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது . இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

ரீசார்ஜ் கட்டண உயர்வு:

இந்தியாவில் 80 சதவீதம் பேர் செல்போன்களை பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பி.எஸ்.என்.எல்., பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்தியாவில் மக்களுக்குத் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களாக உள்ளன. இதில் கடந்த ஆண்டு பி.எஸ்.என்.எல். தவிர மற்ற நிறுவனங்கள் தங்களின் சலுகைக் கட்டணத் தொகையை அதிரடியாக உயர்த்தியது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 2021 ஆண்டு செல்போன் கட்டணத்தை முதலில் உயர்த்தியது ஏர்டெல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் பார்தி ஏர்டெல்லின் 4G வாடிக்கையாளர்கள் 2020 டிசம்பர் மாதத்தில் 16.56 கோடியிலிருந்து 2021 டிசம்பர் மாதம் வரை 18.1 சதவீதம் அதிகரித்து மொத்தமாக 19.5 கோடியாக உயர்ந்துள்ளனர். இந்தியாவில் பார்தி ஏர்டெல் இந்தியா நெட்வொர்க்கில் ஒரு வாடிக்கையாளரின் டேட்டா பயன்பாடு ஒரு வருடத்திற்கு முன்பு 16.37 ஜிபியி ஆகா இருந்தது. இந்த ஆண்டு இது 11.7 சதவீதம் அதிகரித்து 18.28 ஜிகாபைட்களாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏர்டெல் நிருவத்திற்கு பெறும் சரிவு ஏற்பட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் MD சமீபத்தில் பேட்டியளித்தார். இதனால் மீண்டும் ஏர்டெல் சலுகை கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PF பென்ஷன் தொகை அதிகரிப்பு? ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

இதுகுறித்து பார்தி ஏர்டெல் MD மற்றும் இந்தியா மற்றும் தெற்காசியாவின் CEO கோபால் விட்டல் இருவரும் அளித்த பேட்டியில் , 2022 இல் ஏர்டெல் சலுகை கட்டணத்தை உயர்துள்ளோம் என்றும் இது அடுத்த 3-4 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார். மேலும் சிம் ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சி மீண்டும் வர வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் நாங்கள் சலுகை கட்டணத்தை உயர்த்தி வருகிறோம் என்றும் இது போல நாங்கள் ஏர்டெலின் சேவையை வழிநடத்த தயங்க மாட்டோம் என்றும் பேட்டியளித்தார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!