வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – கணக்கு முடக்கம்?
வாட்ஸ் அப் பயனாளர்கள் நீண்ட நாட்களாக செயலியை பயன்படுத்தவில்லை என்றால் அவரது கணக்குகளை நீக்குவதற்கு வாட்ஸ் அப் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதற்கான விளக்கத்தையும் அந்நிறுவனம் கொடுத்துள்ளது.
வாட்ஸ் அப் கணக்கு
நீண்ட காலமாக பயனாளர் ஒருவர் வாட்ஸ் அப் கணக்கை செயல்படுத்தாமல் இருந்தால் அவரது கணக்குகளை நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருவரது கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டால் வாட்ஸ் அப் கணக்கின் அனைத்து தரவுகளும் அழிக்கப்படும். இருப்பினும், வாட்ஸ் அப் பயனர் பேக்அப் (back-up) போன்ற ஆப்ஷன்களை உபயோகித்து, அதே எண்ணில் வாட்ஸ் அப்பை மீண்டும் பதிவு செய்து தரவுகளை சேமித்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
வாட்ஸ் அப் செயலியில் தனிநபரின் பாதுகாப்பை பராமரிப்பதற்கும், தரவு வைத்திருப்பதைக் கட்டுப்படுத்துவதற்கும், தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் இந்த செயல்பாடுகளை மேற்கொள்வதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் கணக்குகள் 120 நாட்கள் செயலற்ற நிலையில் இருந்தால் அவை நீக்கப்படும். அதாவது ஒரு வாட்ஸ் அப் கணக்குக்கு இணைய செயல்பாடுகள் இல்லை என்றால் அது செயலற்றதாக கருதப்படுகிறது.
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 3557 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !
அதுவே ஒரு புதிய பயனர் வாட்ஸ் அப் செயலியை 45 நாட்கள் உபயோகிக்காத பட்சத்தில் அது செயலற்றது என கருதப்பட்டு, அந்த கணக்கை வாட்ஸ் அப் நிறுவனம் நீக்கும். வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி, ஒரு கணக்கு 45 நாட்களுக்கு பயன்படுத்தப்படாமல், பின்னர் வேறு மொபைலில் புதிதாக செயல்படுத்தப்பட்டால், ஒரு கணக்கு மறுசுழற்சி செய்யப்பட்டதற்கான அடையாளமாக அந்நிறுவனம் எடுத்துக்கொள்ளும். மேலும் பழைய தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட வாட்ஸ் அப் கணக்கு நீக்கப்படும்.