தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கைரேகை பதிவில் சிக்கல்! முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதிவிடுவதில் முதியோர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் முதியவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பயோமெட்ரிக் முறை:
நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் இருந்து ரேஷனில் வழங்கும் மானிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்பத்தை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய திட்டம் பிரதமர் மோடி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்கும் செயல்முறை நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் ஆதார் எண் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டு பயோமெட்ரிக் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
அந்த வகையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குவது அடிப்படையில் இத்தகைய ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முறையே தற்போது பயோமெட்ரிக் முறை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து திருப்பூரில் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற கைரேகையை பதிவு செய்வதில் முதியோர் சிரமத்தை எதிர்கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளது.
ஓமைக்ரான் பரவலை தடுக்க ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் திடீர் உத்தரவு!
இத்தகைய பயோமெட்ரிக் முறையில் இளைஞர்கள், நடுத்தர வயதினருக்கு சிரமம் ஏதும் இல்லை. மேலும் குடும்பத்தில் இளைஞர்கள் பலர் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோராக உள்ளனர். அதனால் வயதான பெற்றோர், தாத்தா, பாட்டி மட்டுமே ரேஷன் கடைக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் முதியவர்களுக்கு கைரேகை பதிவாகவில்லை என்றும், காத்திருக்கும் படியும் ரேஷன் ஊழியர்கள் கூறுகின்றனர். இது முதியவர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே ரேஷன் கடையிலேயே முகாம் நடத்தி கைரேகை பதிவு செய்ய வேண்டுமென மூத்த குடிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்