LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – அதிகரிக்கும் டெலிவரி கட்டணம்!
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ள நிலையில் அதைவிட பெரிய சுமை ஒன்று டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் கட்டணமாக இருப்பதாக புகார் வந்துள்ளது.
சமையல் சிலிண்டர் விலை:
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக சமையல் சிலிண்டர் இருக்கிறது. ஏழை எளிய குடும்பங்கள் முதல் பணக்கார வர்க்கத்தினர் கூட சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சென்னையில் தற்போது சிலிண்டர் விலை 965.50 ரூபாயாக உள்ளது. பிப்ரவரி மாதம் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கியது. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
ExamsDaily Mobile App Download
இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையும், கேஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டது. ஆனால் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பதால் மக்கள் எவ்வளவு விலை இருந்தாலும் அதை வாங்கிவிடுகின்றனர். சிலிண்டர் விலையை ஈடு செய்ய முடியாமல் இருக்கும் மக்களுக்கு அதை விட பெரிய சுமையாக இருப்பது சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் கட்டணம் தான்.ஏற்கனவே சிலிண்டர் விலை அதிகமாக இருக்கிறது அதில் இவர்களும் அதிகமாக கேட்பதாக புகார் வந்துள்ளது.
தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது – அமைச்சர் செந்தில் பாலாஜி ஹாப்பி நியூஸ்!
சிலிண்டருக்கான பில்லில் உள்ள கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் என விதிமுறை இருக்கிறது. ஆனால், டெலிவரி ஊழியர்களுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் கட்டாயம் வழங்க வேண்டும் என்பது அறிவிக்கப்படாத விதிமுறையாக இருக்கிறது. சில இடங்களில் 60 அல்லது 80 ரூபாய் வரை டெலிவரி ஊழியர்கள் கேட்பதாக புகார்கள் வந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தான் சிலிண்டர் டெலிவரி செய்வதற்கான செலவும் உயர்ந்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்களிடம் டெலிவரி ஊழியர்கள் அதிக பணம் வசூலிப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.