ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழர்களுக்கு ஷாக் – நடவடிக்கை எடுக்குமா அரசு?
இந்திய அஞ்சல் துறையில் தொழில்நுட்பம் சாராத சாதாரண பணியிடங்களுக்கு கணினி வழியில் இரண்டாம் நிலை தேர்வு நடத்தப்பட உள்ளது. தற்போது இத்தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பை வாரியம் வெளியிட்டது. இதில் தேர்வர்களுக்கு பிற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். அதனால் தேர்வு மையத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தேர்வு மையங்கள்
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரயில்வே துறையில் உள்ள தொழில்நுட்பம் சாராத சாதாரண பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இப்பணியிடத்திற்கான இரண்டாம் நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது இத்தேர்வுக்குறிய தேர்வு மையச் சீட்டினை இணையதளத்தில் ரயில்வே வாரியம் வெளியிட்டது. மேலும் இதனை விண்ணப்பித்தவர்கள் https://www.rrbcdg.gov.in/
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – இனி நடைபாதையில் டிக்கெட்!
அத்துடன் அனைத்து தேர்வர்களும் தங்களுக்கு சொந்த ஊரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதில் உதாரணமாக மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர் ஒருவருக்கு மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல பீகாரில் உள்ள மாணவர் ஒருவருக்கு அசாமில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் தங்களுக்கு நிம்மதியான முறையில் தேர்வு எழுதும் வகையில் ஏற்ற சூழலை அளிக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.