இந்திய யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் – சேமிப்பு கணக்கு வட்டி குறைப்பு!
இந்திய யூனியன் வங்கி (Union Bank of India) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவைகளை வழங்கி வருகிறது. இருப்பினும் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
புதிய விதிமுறை:
பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை மாற்றி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி, புதிய வட்டி விகிதங்கள் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய வட்டி விகிதங்களின்படி, 50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு 2.75% வட்டி வழங்கப்படும். இதற்கு முன்பு 2.90% வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
100 கோடி ரூபாய் வரையில் டெபாசிட் கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு 2.90% வட்டி வழங்கப்படும். 100 கோடி ரூபாய்க்கு மேல், 500 கோடி ரூபாய்க்குள் டெபாசிட் கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு 3.10% வட்டி வழங்கப்படும். இதற்கு முன் 2.90% வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய்க்கு மேல், 1000 கோடி ரூபாய்க்குள் டெபாசிட் கொண்ட சேமிப்புக் கணக்குகளுக்கு 3.40% வட்டி வழங்கப்படும். இதற்கு முன் 2.90% வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் கொண்ட சேமிப்பு கணக்குகளுக்கு 3.55% வட்டி வழங்கப்படும். இதுவரை 2.90% வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் வட்டி உயர்த்தப்படுகிறது.
தமிழகத்தில் மே 18ம் தேதி நேரடி நியமன தோ்வு – கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கவனத்திற்கு!
புதிய வட்டி விகிதம்:
50 லட்சம் ரூபாய் வரை – 2.75%, 100 கோடி ரூபாய் வரை – 2.90%
500 கோடி ரூபாய் வரை – 3.10%, 1000 கோடி ரூபாய் வரை – 3.40%
1000 கோடி ரூபாய்க்கு மேல் – 3.55%
இதற்கிடையில், கோடக் மகேந்திரா வங்கி 390 நாட்களில் முதிர்ச்சியடையும் 2 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 5.50 சதவீதம் ஆக உயர்த்தி உள்ளது. முன்னதாக 5.20 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 4.40 சதவீதமாக உயர்த்தி உள்ளது.