TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோருக்கு ஷாக் நியூஸ் – ஒரு பதவிக்கு 300 பேர் போட்டி!
குரூப் -4 தேர்விற்கு மொத்தமாக 7,382 காலி பணியிடங்கள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடக்க இருப்பதால் 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், ஒரு பணியிடத்திற்கு மட்டுமே சுமார் 300 பேர் போட்டியிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரூப் -4 தேர்வு:
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் குரூப் -1, குரூப் -2, குரூப் -4 முதலான தகுதி தேர்வுகள் நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் குரூப் -1, குரூப் -2, குரூப் -4 முதலிய தகுதி தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியானது. மேலும், மார்ச் 29 ஆம் தேதி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி குரூப் -4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குரூப் -4 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதால் குரூப் -4 தேர்விற்கு 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் -4 தேர்விற்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இந்தாண்டு கூடுதலாக 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், குரூப் -4 தேர்வின் மூலமாக கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மாநில வாரியான கோடை விடுமுறை விவரங்கள் இதோ!
அதாவது குரூப் -4 தேர்வின் மூலமாக 7,382 பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இதில் 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படவுள்ளன. இதன் மூலமாக ஒரு பணியிடத்திற்கு மட்டுமே சுமார் 300 பேர் போட்டியிடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஏஓ பணிக்கு 274 காலிப் பணியிடங்களும், ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 3681 காலிப் பணியிடங்களும், தட்டச்சர் பணிக்கு 2108 காலிப் பணியிடங்களும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 1024 காலிப் பணியிடங்களும், வீட்டு வசதி வாரியம் நகர்ப்புற வாழ்வில் மேம்பாட்டு வாரியம் ஜூனியர் அசிஸ்டென்ட் பில் கலெக்டர் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 163 காலிப் பணியிடங்களும் உள்ளன.