TN TRB தேர்வர்களுக்கு ஷாக் அறிவிப்பு – வினாத்தாளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஆசிரியை கைது!
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு TN TRB தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஆசிரியை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியை கைது:
தமிழகத்தில் TN TRB தேர்வு வாரியத்தால் பள்ளி முதுநிலை ஆசிரியர் மற்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு நடைபெற்ற சில நிமிடங்களில் ஆங்கில தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அவ்வாறு வெளியானதால் தேர்வர்கள் முன்கூட்டியே வினாத்தாள் வெளியிடப்பட்டதாக TRB தேர்வு வாரியம் மீது குற்றம் சாட்டினர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.176 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
பின்னர் இது குறித்து TNTRB தேர்வு வாரியம் தேர்வு முடிந்த பிறகு தான் வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. முன்கூட்டியே வினாத்தாள் வெளியானதாக பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விசாரணையில் நாமக்கல்லை சேர்ந்த பூர்ணிமா என்ற ஆசிரியையே வினாத்தாளை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டது. பின்னர் வினாத்தாளை வெளியிட்ட பூர்ணிமா என்பவருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்து TRB தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது.
சென்னையில் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – விமான பயணிகளுக்கு ‘இது’ கட்டாயம்!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை பூர்ணிமா செய்த இந்த செயலால் தேர்வர்களிடையே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது உள்ள நம்பகத்தன்மை சீர்குலைந்துள்ளது. இவ்வாறாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் பூர்ணிமா செயல்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் பூர்ணிமாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.