ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்காதவர்களுக்கு ஷாக் நியூஸ் – புதுவை அரசின் திடீர் முடிவு!

0
ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்காதவர்களுக்கு ஷாக் நியூஸ் - புதுவை அரசின் திடீர் முடிவு!
ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்காதவர்களுக்கு ஷாக் நியூஸ் - புதுவை அரசின் திடீர் முடிவு!
ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்காதவர்களுக்கு ஷாக் நியூஸ் – புதுவை அரசின் திடீர் முடிவு!

மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள அனைவரும் தங்கள் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட்டுள்ளது. இதனை இதுவரை செய்யாமல் உள்ளவர்களின் ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு:

ஆதார் அட்டையானது நாடு முழுவதும் அரசின் அனைத்து வகை செயல்பாடுகளுக்கும் அடிப்படை ஆவணமாக கருதப்படுகிறது. இதனால் ஆதார் அட்டையை ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற மற்ற ஆவணங்களுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உணவு பொருள் வழங்கல் துறையானது போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், இரண்டு இடங்களில் உள்ள பதிவு செய்யப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளை கண்டறிந்து அதை நீக்கம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில், புதுவையில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள 13,400 பேர் மற்ற மாநில ரேஷன் கார்டுகளிலும் இடம் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்போது இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டு, முறையான ஆவணம் இல்லாதவர்களின் பெயர்களை நீக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், ஆதார் அட்டையுடன் தங்கள் ரேஷன் கார்டுகளை இணைக்காத 60,000 பேர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் நவ 11, 25 தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

Exams Daily Mobile App Download

இதற்காக ஆதார் இணைப்பு மையம் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மீறியும் ஆதார் இணைக்காதவர்களின் பெயர்கள் குடிமை பொருள் வழங்கல் துறையின் ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!