TCS ஊழியர்களுக்கு ஷாக் நியுஸ் .. முடிவுக்கு வரும் WFH – இல்லையேல் வேலைக்கு ஆப்பு!
நாடு முழுவதும் உள்ள அனைவரும் மீண்டும் அலுவலக பணிக்கு திரும்பி வரும் சூழ்நிலையில், TCS தற்போது தனது ஊழியர்களுக்கான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
ஷாக் நியுஸ்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று சமயத்தில் ஸ்தம்பித்து நின்று விட்ட சமயத்திலும், ஐடி மட்டும் வழக்கம் போல் மும்முரமாக பணியாற்றி வந்தனர். நேரடியான பணிகள் மட்டும் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தகவல் தொழில்நுட்ப துறைக்கான தேவைகள் அதிக அளவில் இருந்தது. இதனால் அந்த சமயத்தில் அதிக இளைஞர்கள் புதிதாக வேலைவாய்ப்பினை பெற்றனர். ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையினால் இவை அனைத்தும் சாத்தியமாகியது.
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த ஓய்வூதியம் – முதல்வர் வெளியிட்ட ஆணை!
இந்நிலையில், தற்போது சமீப காலமாக கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து மீண்டும் இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளதால் பல முன்னணி நிறுவனங்களும் மீண்டும் நேரடியாக பணியாற்ற தொடங்கியுள்ளது. இதனால் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில், TCS நிறுவனமும் இது தொடர்பாக தனது ஊழியர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி, இனி TCS நிறுவன ஊழியர்கள் ஒரு வாரத்தில் கட்டாயமாக 3 நாட்கள் அலுவலகங்களை வந்து பணியாற்ற வேண்டும் என்றும், ஊழியர்கள் எப்போது வர வேண்டும் என்பதை மேலாளர்கள் பட்டியல் இட்டு தெரிவிப்பார்கள் என்றும், அதனை கட்டாயம் ஊழியர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும்,நிர்வாகத்தின் இந்த உத்தரவிற்கு ஒத்துழைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்