SBI வங்கி அதிகாரிகளுக்கு ஷாக் நியூஸ் – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளின் விடுப்பு பயணச் சலுகையை திரும்பப் பெற்றதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிரடி உத்தரவு:
கடந்த 1982 ல் வங்கி அதிகாரிகளுக்கு, விடுப்புடன் கூடிய வெளிநாட்டு பயண சலுகை வழங்கி, சுற்றறிக்கை அளிக்கப்பட்டது. இந்த சலுகையை, தங்கள் அதிகாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கி, வணிக வங்கிகள் வழங்கின. இந்நிலையில் வெளிநாட்டு பயணங்களுக்கான சலுகையை மட்டும் திரும்பப்பெற்று இந்தியன் வங்கி சங்கம், 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. எந்த முன்னறிவிப்பும் இன்றி, தங்களுடன் விவாதிக்காமல், வாபஸ் பெற்றதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில், வழக்கு தொடரப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மத்திய அரசின் பயண சலுகை திட்டத்தை, பொதுத்துறை வங்கிகளும் பின்பற்றும்படி, 2014 ஏப்ரலில் அறிவுறுத்தப்பட்டது. மத்திய அரசின் சுற்றறிக்கையை, இந்தியன் வங்கி சங்கமும் அமல்படுத்தியது. மேலும் பாரத ஸ்டேட் வங்கியும், சலுகையை வாபஸ் பெற்று சுற்றறிக்கை பிறப்பித்தது.வெளிநாட்டு பயண சலுகையை வாபஸ் பெற்றதால், பணி நிபந்தனைகள் மற்றும் விதிகளை மீறியதாக கூற முடியாது.
அரசு வங்கிகள் தனியார்மயமாவது சாத்தியமா? முழு விவரம் இதோ!
ஏனென்றால், பணி விதிகளில் வழங்கப்பட்டுள்ள சலுகையை வாபஸ் பெறவில்லை. மத்திய அரசின் கொள்கையை, பொது நலன் கருதி, அனைத்து பொதுத்துறை வங்கிகளும் பின்பற்ற வேண்டும். எனவே, மத்திய அரசின் கொள்கை முடிவு அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி எடுத்த முடிவில் எந்த குறைபாடும் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு SBI வங்கி அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.