சென்னை மக்களுக்கு ஷாக் நியூஸ் – மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அனைத்து பணிகளும் வழக்கம் போல் நடைபெற்று வந்தன. பள்ளிகளிலும் தேர்வுகள் நிறைவடைந்து அடுத்த கல்வி ஆண்டு இன்னும் 10 நாள்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதியில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா:
கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த தொற்றை முழுமையாக ஒழிக்க உலக சுகாதாரத் துறை இன்னும் போராடி வருகிறது. இதற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்த தொற்று பாதிப்பால், 2 வருடங்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் கல்வியும் பெரிய அளவில் பாதிப்பை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட 3வது அலையிலிருந்து விரைவில் விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது, சென்னையில் 9, 13 வது மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், விஐடி போன்ற இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து மாணவர்கள் வருவதால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் 11வது தவணை கிசான் நிதியுதவி – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் குரங்கு காய்ச்சல் பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார். பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். மேலும் ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை தொடங்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறிவந்த நிலையில் தற்போது அதிகரிக்கும் கொரோனா பரவல் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு கொரோனா அலையையோ, அதனால் ஏற்படுத்தப்படும் ஊரடங்கையோ தாங்க முடியாது என வேதனை தெரிவிக்கின்றனர்.