ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஷாக் தகவல் – 2 கோடி கார்டுகள் ரத்து!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஷாக் தகவல் - 2 கோடி கார்டுகள் ரத்து!
ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஷாக் தகவல் - 2 கோடி கார்டுகள் ரத்து!
ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஷாக் தகவல் – 2 கோடி கார்டுகள் ரத்து!

கடந்த சில ஆண்டுகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் அரசின் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது. மேலும்குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாக் தகவல்:

இந்தியாவில், மக்களுக்காக பல வகையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏழை மக்களுக்கு அரசு இலவசமாக அல்லது குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றது. அதே சமயம் ஏழை மக்கள் ரேஷன் கார்டு மூலம் குறைந்த விலையில் எளிதாக ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இது ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் சிறு சிறு தவறுகளால் ரேஷன் கார்டுக்கான பலன்களை மக்கள் இழக்க வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.

Exams Daily Mobile App Download

சமீபத்தில், மாநிலங்களவையில் பாஜக எம்பி சுஷில் குமார் மோடியின் கேள்விக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த 2017 முதல் 20-21 வரையிலான 5 ஆண்டுகளில் நகல், தகுதியற்ற மற்றும் போலி ரேஷன் கார்டுகள் என மொத்தம் 2 கோடியே 41 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆதார் அட்டையில் பிறந்த தேதியை ஆன்லைனிலையே மாற்றலாம்? எளிய வழிமுறைகள் இதோ

முன்னதாக, உ.பி.யில் ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கும் செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது. தகுதியில்லாத ரேஷன் கார்டுதாரர்கள் தாசில்தாரிடம் சென்று ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் என்று இந்த செய்தியில் கூறப்பட்டு வந்தது. இல்லையெனில், அவர்களிடமிருந்து ரேஷன் பொருட்கள் அரசால் வசூலிக்கப்படும். இருப்பினும், இது குறித்து பின்னர் விளக்கம் அளித்த போது, உ.பி.யின் யோகி அரசு அப்படியொரு விதியை உருவாக்கவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போது ரேஷன் கார்டுகளை ரத்து செய்யும் திட்டம் மாநிலத்தில் உ.பி அரசால் தொடங்கப்பட்டுள்ளது. உ.பி அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தகுதியில்லாதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு ஏழைகளுக்கு மட்டுமே இலவச ரேஷன் பலன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 1.42 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர மகாராஷ்டிரா மாநிலத்தில் 21.03 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!