TCS நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – முடிவுக்கு வரும் WFH முறை?
TCS நிறுவனம் தனது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைக்க ஆலோசித்து வரும் நிலையில் விரைவில் WFH முறை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
WFH முறை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வழக்குகள் குறைந்து வருவதால், பல நிறுவனங்கள் அலுவலகங்களில் இருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் தொடங்கியுள்ளன. இது சம்பந்தமாக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சமீபத்தில் அளித்துள்ள விவரங்களின் படி, அதன் 6 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களில் 20 சதவீதம் பேர் இப்போது அலுவலகத்தில் இருந்து வேலை செய்வதாக கூறியது. இந்த நிறுவனம் தற்போது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்புவதை விரும்புகிறது. அதாவது, பல ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரிவதால் 2025ம் ஆண்டுக்குள் திட்டமிடப்பட்ட கலப்பின வேலை மாதிரியை செயல்படுத்தும் நோக்கத்தில் WFH முறையை முடிக்க TCS முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தை பற்றி டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், ‘தற்போதைக்கு நிறுவனம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை அடையும் வரை அல்லது குறைந்தபட்சம் 80 சதவிகிதம் ஆகும் வரை, ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதை ஊக்குவிக்கும். இந்த திட்டம் மிகவும் கட்டுப்பாடான முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி முதலில் மிகவும் இயல்பான பணிச்சூழலுக்கு திரும்பி பின்னர் நிரந்தர கலப்பின மாதிரியை துவங்குவதற்கு ஆலோசித்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.
TNCSC அரசு வேலைவாய்ப்பு – 1000+ காலிப்பணியிடங்கள்! முழு விபரம் இதோ!
இதற்கிடையில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் டிசிஎஸ் நிறுவனம் அதன் 25/25 மாடலை அறிவித்தது. இந்த திட்டத்தில், வரும் 2025ம் ஆண்டிற்குள் அதன் ஊழியர்களில் 25 சதவிகிதத்தினர் மட்டுமே எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்வார்கள் என்று இந்நிறுவனம் கூறுகிறது. மேலும் பணியாளர்கள் தங்கள் நேரத்தில் 25 சதவீதத்திற்கு மேல் அலுவலகத்தில் இருந்து செலவிட வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.