திடீரென நிறுத்தப்பட்ட “பிக்பாஸ் அல்டிமேட்” நேரலை நிகழ்ச்சி – போட்டியாளர்களுக்குள் மோதல்? ரசிகர்கள் ஷாக்!
“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் அபிராமிக்கும் வணிதாவிற்கும் இடையே சண்டை நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சி சில நேரங்களுக்கு நேரலையில் காட்டப்படாமல் நிறுத்தப்பட்டது.
பிக்பாஸ் நிறுத்தம்:
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தற்போது வரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் ரசிகர்களுக்கு மீண்டும் அறிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதாவது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் சிறப்பாக 24 மணி நேரமும் நிகழ்ச்சியை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் இருந்து சுவாரஸ்யமான போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
அதில் வனிதாவும் 14 பேரில் ஒருவராக இருக்கின்றார். அவர் நிகழ்ச்சி தொடங்கி முதல் நாளில் இருந்து பல சர்ச்சைகளை தொடங்கி இருக்கிறார். அதில் அவர் காபி பொடி வேண்டும் என போராட்டம் செய்கிறார். ஆனாலும் பிக்பாஸ் கண்டுகொள்ளாமல் இருக்க போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்க் செய்து காபி பொடி கொடுத்தனர். ஆனால் வனிதா அதற்கு முன்னதாக அனைவருக்கும் டீ கிடையாது என டீ தூள்ளை ஒளித்து வைத்து இருக்கிறார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சூப்பர் அறிவிப்பு – மேரா ரேஷன் ஆப் அறிமுகம்!
அதன் பின் காபி பொடி வந்ததும் யாருக்கும் இது கிடையாது என சொல்ல உடனே கோவப்பட்ட அபிராமி வணிதாவிடம் கேள்வி கேட்க, வனிதா பொருள்களை எல்லாம் தூக்கி போடுகிறார். அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அதனால் என்ன நடந்தது என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். மேலும் 24 மணி நேரம் லைவ் என சொல்லி இப்படி செய்ததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். அதன் பின் எப்போதும் போல நேரலை தொடங்கப்பட்டது. ஓடிடி தளம் என்பதால் இது போல தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.