திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஷாக் அறிவிப்பு – இனி ஒரு குடும்பத்துக்கு 2 லட்டு தான்!
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் லட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் பக்தர்களுக்கு லட்டுகள் குறைவாக விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லட்டு தட்டுப்பாடு
ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக பக்தர்களுக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே ஆன்லைன் முறையில் வெளியிடப்பட்டன. அத்துடன் இதனை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மே 9 முதல் கோடை விடுமுறை!
இப்போது கொரோனா பரவலின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் பல்வேறு தளர்வுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு இலவச நேரடி தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அத்துடன் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் சமயத்தில் டிக்கெட்டுகளை வழங்கமால் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி இப்போது நாள் ஒன்றுக்கு 70000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ExamsDaily Mobile App Download
இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சென்னையில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருப்பதியில் இருந்து லட்டு பிரதானம் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் தற்போது நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் லட்டு பிரசாதத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் இனிமேல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு கூடுதலாக 2 லட்டுகள் மட்டுமே கொடுக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக பக்தர்களுக்கு கூடுதலாக எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கப்பட்டு வந்தது.