தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருட்கள்?
தமிழகத்தில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழு தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ரேஷன் பொருட்கள்:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவான விலையில் பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர். 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன அவற்றில் முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் கொரோனா நிவாரணத்தொகை 2 தவணையாக வழங்கப்பட்டது. மேலும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (டிச.30) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்னும் சிலர் முதல் டோஸ் தடுப்பூசிகளையே செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 33 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!
அதன் ஒரு பகுதியாக ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரண்டு தடுப்பூசிகள் செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகளையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழு தலைவர் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ள நிலையில் இத்தகைய கோரிக்கைகள் எழுந்து வருவதால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.