தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – அதிகரிக்கும் அரிசி கடத்தல்!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பலவிதமான மோசடிகள் நடந்து வருவதாக, ஏராளமான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த புகாரின் பேரில் தமிழக அரசும் கடும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிரடி நடவடிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று குமரி மாவட்டம் களியக்காவிளை உதவி ஆய்வாளர் சிந்தாமணி மற்றும் காவலர்கள் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியாக வந்த ஒரு மினிலாரியை சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வண்டியை ஓட்டி வந்தது பெருசிலம்பு பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (25) என்பது தெரியவந்தது. பின்பு அவரிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் காட்டாக்கடைக்கு ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
பின்னர் தினேஷை கைது செய்த போலீசார் அந்த மினிலாரியையும், 8 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு ரோந்து சென்ற உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் பிடிபட்ட டெம்போ மற்றும் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே 63 வயது முதியவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்திருந்தார்.
Exams Daily Mobile App Download
அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது, நியாய விலை கடையில் பணியாற்றிய வெங்கடாசலபதி ஏழ்மை நிலையிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் நோக்கில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் ஆத்திரம் அடைந்த நபர்கள் நண்பர்கள் உதவியுடன் வெங்கடாசலபதியை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது தற்போது அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் உத்தரவின் பெயரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.