LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – டெபாசிட் தொகை அதிகரிப்பு! மக்கள் அதிருப்தி!
LPG கேஸ் சிலிண்டரின் டெபாசிட் தொகை திடீரென அதிரடியாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் எரிவாயு சிலிண்டரன் ரெகுலேட்டர் விலையும் உயரத்தப்பட்டுள்ளது. டெபாசிட் தொகை எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்பதற்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
LPG கேஸ் சிலிண்டர்
கடந்த சில மாதங்களாகவே LPG சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை முறையாக திருத்தப்பட்டு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே நான்கு முறை எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு விட்டது. அவ்வப்போது கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துகொண்டே செல்வதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் டெபாசிட் தொகை 2200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 5 கிலோ எடை கொண்ட LPG சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டு சிலிண்டர்களுக்கான இணைப்பை பெற விரும்பினால் ரூ.4,400 செலுத்த வேண்டும். சிலிண்டரின் விலை மட்டுமல்ல, எரிவாயு சிலிண்டரன் ரெகுலேட்டர் விலையும் உயரத்தப்பட்டுள்ளது. அதாவது எரிவாயு சிலிண்டரன் ரெகுலேட்டர் விலை ரூ.550 வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
Jio Phone வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் – அதிகரித்த ரீசார்ஜ் திட்டங்களின் விலை!
LPG சிலிண்டர்களை தொலைத்துவிட்டாலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதாவது 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.2,650 வரைக்கும் அபராதம் விதிக்கப்படும். மேலும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.1,400 வரைக்கும் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டரின் டெபாசிட் தொகை தொடர்ந்து அதிகரிப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.