வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – உயரும் EMI தொகை!
அடிப்படை வட்டி என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் மிக அடிப்படையான வட்டியாகும். அடிப்படை வட்டி உயர்த்தப்படும்போது கடனுக்கான EMI தொகையும் உயரும் என்பதாகும். இந்நிலையில் வீட்டுக் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
ஷாக் அறிவிப்பு:
அண்மைக்காலமாக உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறோம், பணவீக்கம் உயர்ந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதாவது, 0.40 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதையடுத்து வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன் இது, 4 சதவீதமாக இருந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பின், முதன் முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த வட்டி உயர்வானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து, வங்கியில் வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு மாதாந்திர தவணை தொகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், வங்கி பிக்சட் டெபாசிட்தாரர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முன்னணி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமான பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் (PNB Housing Finance) தற்போது வீட்டுக் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு படி, மே 9ஆம் தேதி முதல் வீட்டுக் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன் அல்லாத மற்ற கடன்களுக்கும் அடிப்படை வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தியுள்ளதாக பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 – குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ஹாப்பி நியூஸ்!
இதனால் வீட்டுக் கடன்களுக்கான EMI தொகை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலக்கட்டத்தில் மாத சம்பளம் வாங்குபவர்களின் சம்பளத்தை வைத்துக் கொண்டு வீடு கட்டுவது என்பது முடியாத காரியமாக உள்ளது. எல்லோருக்கும் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்ற பலருக்கும் உதவுவது வீட்டுக் கடன்கள் தான். இந்த நிலையில் வீட்டுக் கடன்களுக்கான EMI தொகை உயர்வது, கடன் வாங்கியவர்களுக்கு அதிருப்தியில் உள்ளனர். அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது முன்னதாக கடன் வாங்கியவர்களுக்கும், புதிதாக கடன் வாங்குவோருக்கும் என இருதரப்பினருக்குமே EMI தொகை உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.