அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஷாக் அறிவிப்பு – விரைவில் புதிய விதிகள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஷாக் அறிவிப்பு - விரைவில் புதிய விதிகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஷாக் அறிவிப்பு - விரைவில் புதிய விதிகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஷாக் அறிவிப்பு – விரைவில் புதிய விதிகள்!

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பல மாநிலங்களில் இலவச ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இதனை தற்போது ரத்து செய்வது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ரேஷன் கார்டு

இந்தியாவில் உணவு பொருட்கள் மலிவான விலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்படுகிறது. அத்துடன் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் கடந்த 2016ம் ஆண்டு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு”, என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை எளிதாக பெற முடியும். இத்திட்டத்தின்படி புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்றாலும் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தங்களின் கைரேகை பதிவை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெற முடியும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4 நாட்கள் தொடர் விடுமுறை!

இத்திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலமாக சுமார் 80 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும் தற்போது பல மாநிலங்களில் இலவச ரேஷன் திட்டமான ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டம் அமலில் உள்ளது. இதில் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கான காலம் முடிவடைந்த நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துளளது. அதாவது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இலவச ரேஷன் திட்டம் அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 14 முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் முழு அடைப்பு – எந்தெந்த மாநிலங்களுக்கு? விடுமுறை பட்டியல் இதோ!

இந்த திட்டத்தினால் பணக்காரர்கள் கூட பயன் அடைந்து வருகின்றனர். அதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்காமல் உள்ளது. அதன் காரணமாக இத்திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வரலாம். மேலும் இது குறித்து அனைத்து மாநிலங்களையும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை கூட்டத்திற்கு அழைத்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும். அதன்படி இதில் தகுதிகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். இதனால் இத்திட்டத்தால் பயன்பெற்று வருபவர்கள் பாதிப்பு அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!