சமந்தா, தனுஷை தொடர்ந்து விவாகரத்து பெற இருக்கும் விஜய் பட நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை சமந்தா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரை தொடர்ந்து தற்போது முக்கிய திரை பிரபலம் ஒருவர் டிவோர்ஸ் வாங்க இருப்பதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து வரும் இந்த டிவோர்ஸ் கலாச்சாரத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பிரபல நடிகை விவாகரத்து
சினிமா துறையில் பிரபலமாக இருந்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் தங்களுடன் பணியாற்றிய நடிகர் அல்லது நடிகைகளை காதலித்த திருமணம் செய்து கொள்வது வழக்கம். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நல்ல புரிதலோடு இறுதி வரை நல்ல தம்பதிகளாக வாழ்வர். அதில் ஒரு சிலர் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவர். அப்படி சமீபத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைப்பது போல நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். இருவரும் கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – புதிய கடை திறப்பு விழா! வைரலாகும் வீடியோ!
இவர்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து விட்டனர். அடுத்தடுத்து தொடர்ச்சியாக பல பிரபலங்கள் இது போல டிவோர்ஸ் பெற்று வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். தற்போது அடுத்ததாக ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையான நடிகை ஷில்பா ஷெட்டி விவாகரத்து பெற இருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீப நாட்களுக்கு முன்பாக தவறான படங்களை எடுக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த குரங்கு, சீண்டிய போட்டியாளர்கள் – எச்சரித்த பிக்பாஸ் குரல்!
இந்த விவகாரத்தின் காரணமாக தான் ஷில்பா ஷெட்டி தனது கணவரை பிரிய இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் வைரலாகி வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக ஷில்பா ஷெட்டி தனது கணவரது பெயரில் இருந்த பண்ணை வீட்டினை தனது பெயருக்கு மாற்றி உள்ளார். அதே போல ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தனது பெயரில் உள்ள ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றியுள்ளாராம். இதனால் இருவரும் கூடிய விரைவில் பிரிய இருக்கிறார்கள் என்பது போன்ற செய்திகள் வைரலாகி வருகிறது.