தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளில் மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் சற்று குறைந்து கொண்டு வருவதால் பள்ளி, கல்லூரிகளை பிப்ரவரி 1 முதல் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் சுழற்சி முறையில் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இது குறித்த விளக்கத்தை கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
பள்ளி திறப்பு:
தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பெருந்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் பரவலும் வேகமாக பரவி வந்ததால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால் – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. அதனால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், இரவு நேர ஊரடங்கு நீக்கப்பட்டு அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. அத்துடன் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? அரசுக்கு கோரிக்கை!
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியதாவது, கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் பாடத்திட்டம் முழுவதையும் விரைவில் முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் பொதுத் தேர்வு மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும். தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 90% மேலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.