தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு ஷிப்ட் முறையில் வகுப்புகள் – அமைச்சர் விளக்கம்!
தமிழக கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும், பெண்கள் மாலையிலும் வந்து பயிலும் வகையிலான ஷிப்ட் முறையை நடைமுறைப்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஷிப்ட் முறை:
இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
இதனால் நோய் தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்தது. இதனையடுத்து மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் ஆண்டுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.அதே கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை முடிவு செய்தது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று வேகமெடுக்கத் தொடங்கியது.
ExamsDaily Mobile App Download
அதனால் செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டது. தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுளை எழுத அறிவுறுத்தப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும், பெண்கள் மாலையிலும் வகுப்புகளுக்கு வந்து பயிலும் வகையிலான ஷிப்ட் முறையை கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மேலும் 10 கல்லூரிகளை தமிழகத்தில் தொடங்குவதற்கு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.