அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு – ஷார்ஜா மன்னர் அறிவிப்பு!!
ஷார்ஜாவில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் 17,500 திராம்களில் இருந்து 25,000 திராம்களாக உயர்த்தி ஷார்ஜா மன்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது கடந்த மே ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்தவர், ஷார்ஜாவின் மன்னர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி. நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது மக்கள் வறுமையில் வாடக் கூடாது. வாழ்க்கையை நடத்துவதற்கான செலவீனங்கள் அதிகரித்தால் அதற்கேற்ப ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும். பொதுமக்கள் குறைந்த வருவாய் உடன் வாழ்க்கையை போராட்டத்துடன் நடத்த அனுமதிக்க மாட்டேன்.
TN Job “FB Group” Join Now
அதன்படி, ஷார்ஜாவில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் 17,500 திராம்களில் இருந்து 25,000 திராம்களாக உயர்த்தி அறிவித்தார். இது ஷார்ஜா மக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது கடந்த மே ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. ஏழு துறைகளில் வேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். ஓய்வு பெற்றவர்களிலும் உரிய நபர்கள் தேர்வு செய்து பணி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடைகள் திறக்க அனுமதி? மேற்கில் கடும் கட்டுப்பாடுகள்!
டிசம்பர் மாதம் மிகப்பெரிய பட்ஜெட்டிற்கு ஷார்ஜா அரசு ஒப்புதல் அளித்தது. மொத்த பட்ஜெட்டில் 33.6 பில்லியன் திராம்களில் 47 சதவீதத்தை ஊதியத்திற்காக மட்டும் அரசு ஒதுக்கீடு செய்தது. இது தொடர்பாக ஷார்ஜா மக்கள் கூறுகையில், குறைந்த வருவாய் கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் குடிமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசின் உத்தரவு பெரிதும் உதவிகரமாக இருக்கும். மன்னரின் அறிவிப்பு எமிரேட்ஸ் சமூக மக்களிடம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்கின்றனர்.