ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பெரும் பங்குகள் விற்பனை – கையகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பெரும் பகுதியான பங்குகளை கையகப்படுத்தியுள்ளதால் ஜஸ்ட் டயல் நிறுவனத்தை மேலாண்மை செய்யும் முழு பொறுப்பையும் பெற்றுள்ளது.
ஒப்பந்தம்:
ஜஸ்ட் டயல் நிறுவனம் இந்திய அளவில் உள்ள விவகாரங்கள் குறித்து தேடுவதற்குரிய மிக முக்கியமான தளமாக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை தேடுவதற்கு இணையதளம், ஆப், தொலைபேசி, குறுஞ்செய்திகள் ஆகிய வழிகளில் தேடுவதற்கான சேவையை வழங்குகிறது. இதனால் இந்திய அளவில் தேடும்பொறி தலத்தில் முதன்மை வகிக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்களை ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் மேற்பார்வை இட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் இணையத்திற்கு அடிமையாவதை தடுக்க ஆலோசனை – தமிழக அரசு!
இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் லாபகரமாக இயங்கும் சில்லறை வர்த்தக நிறுவனம் ரிலையன்ஸ் ஆகும். உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சில்லறை வர்த்தக நிறுவனம் ரிலையன்ஸ் ஆகும். சர்வதேச சில்லறை வர்த்தக நிறுவனப் பட்டியலில் 53-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 100 இடத்தில் இடம்பிடித்த ஒரே இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் மட்டுமே ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜஸ்ட் டயல் நிறுவனங்களுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒப்பந்தம் உறுதியானது.
TN Job “FB Group” Join Now
ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து 3,497 கோடி ரூபாய் மதிப்பிலான 40.95 % பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இந்தநிலையில், ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம், செப்டம்பர் 1-ம் தேதி முதல் செபியின் கையகப்படுத்துதல் ஒழுங்குமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் முழு மேலாண்மையையும் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது வரை, ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 25.35 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.