முதல்முறையாக காதலருடன் புகைப்படத்தை வெளியிட்ட ஜீ தமிழ் சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “செம்பருத்தி” சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகை ஷபானா தற்போது தனது காதலன் நடிகர் ஆர்யனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
ஷபானா – ஆரியன்
மக்கள் இன்று தங்கள் பொழுதை சீரியல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி பார்த்து கழிக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். இதனால் இன்று மக்கள் மத்தியில் சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மவுஸ் அதிகம். அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “செம்பருத்தி” சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான், நடிகை ஷபானா. இவரது நடிப்புக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” அம்மாவின் சினிமா பயணம் – 14 வயதில் திரையுலகில் அறிமுகம்!
இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடங்களில் எப்போதும் இடம் பிடித்திருக்கும். இப்படியாக இருக்க, நடிகை ஷபானா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “பாக்கியலட்சுமி” சீரியலில் நடிக்கும் நடிகர் ஆரியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து தற்போது தனது காதலர் ஆரியனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகை ஷபானா. தனது காதலருடன் முதன் முறையாக இது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஷபானா. ரசிகர்கள் பலரும் இருவரது ஜோடி பொருத்தத்தையும் பார்த்து வாழ்த்தி வருகின்றனர். லைக்குகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.