தொடரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசின் அதிரடி அறிக்கை!
ஷாங்காய் நகரில் சனிக்கிழமையன்று 23,600 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்த்த அளவை விட நோய்த்தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவு செய்யப்படுவதாக ஷாங்காய் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
சுமார் 25 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷாங்காயில் சனிக்கிழமையன்று புதிய கோவிட்-19 ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உத்தரவிடப்பட்டது, முன்னதாக வெள்ளிக்கிழமை 1,015 அறிகுறி உள்ளவர்களை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. சோதனை முடிவுகளின் அடிப்படையில், ஆபத்து நிலைகளுக்கு ஏற்ப நகரம் வெவ்வேறு பகுதிகளை நிர்வகிக்கும். ஷாங்காயில் கோவிட்-19 சிகிச்சைக்காக 100க்கும் மேற்பட்ட தற்காலிக மருத்துவமனைகள் 160,000 படுக்கைகள் மற்றும் 8,000 படுக்கைகள் கொண்ட எட்டு நியமிக்கப்பட்ட மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!
நாட்டின் பிற இடங்களில், தெற்கு சீனாவில் உள்ள குவாங்சோ போன்ற மாகாணங்களும் நகரங்களும் அதிக பாதிப்புகளை உறுதி செய்யப்படும் அபாயத்தில் உள்ளது. தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோ, சனிக்கிழமையன்று நகரமெங்கும் கோவிட் தடுப்பு முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவில் கண்டறிய, நகரம் முழுவதும் நியூக்ளிக் அமில சோதனை உட்பட அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் Guangzhou எடுத்து வருவதாக குவாங்சோவின் சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் சென் பின் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று 23,600 புதிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவிட் பரவலை நகரம் கையாள்வதில் உள்ள குறைபாடுகளை ஷாங்காய் துணை மேயர் ஒப்புக்கொண்டார். தொற்றுநோய் தடுப்பு “மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, மேலும் சிறிதளவு மந்தநிலையை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று ஜோங் கூறினார். இதனால் தொடர்ந்து குறைவான இயக்கம் மற்றும் கடுமையான கட்டுப்பாட்டைகையாள இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்,மருத்துவப் பணியாளர்கள், பொதுப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.