விமானத்தில் வந்த இதயம், சைத்ராவிற்கு ஷபானா செய்த தியாகம் – வெளியான இன்ஸ்டா பதிவு!
ஜீ தமிழ் சீரியல்களில் முன்னணி நடிகையாக நடித்து வரும் ஷபானா மற்றும் சைத்ரா சீரியலை தவிர்த்து சிறந்த தோழிகளாக பழகி வருகின்றனர். இந்நிலையில் தோழிகளுக்கு நடுவே நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து இன்ஸ்டாவில் பதிவு ஒன்று வெளியாகி உள்ளது.
ஷபானா & சைத்ரா:
தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனலாக ஜீ தமிழ் இருக்கிறது. இதில் பிரபலமான சீரியல்கள் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்தன. குறிப்பாக செம்பருத்தி, யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா என பல சீரியல்கள் இருக்கின்றன. இதில் செம்பருத்தி சீரியலில் நடித்த ஷபானா, யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த நக்ஷத்திரா, சைத்ரா, பூவே பூச்சூடவா சீரியலில் நடித்த ரேஷ்மா ஆகியோர் நெருங்கிய தோழிகளாக பழகி வருகின்றனர். சைத்ராவின் திருமணத்தில் தோழிகள் செய்த லூட்டிகளை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
திருமணமான ஒரே மாதத்தில் ‘செம்பருத்தி’ ஷபானா & ஆர்யன் பிரிவு உண்மை தானா? அதிரடி பதில்!
அந்த சீரியல்கள் முடிந்தாலும் நான்கு பேரும் தோழிகளாக பழகி வருகின்றனர். இந்நிலையில் ஷாபனாவிற்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது. முழுக்க முழுக்க ரேஷ்மாவின் ஆதரவின் படி திருமணம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின் ரேஷ்மா திருமணம் நடைபெற்றது. அதில் ஷபானா தாலி கட்டும் போது ஆனந்த கண்ணீரில் இருந்தார். அந்த அளவிற்கு தோழிகளாக பழகி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சைத்ரா ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ – 3வது இடத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!
அதில் இந்த பெட்டியில் இருக்கும் இதயம் யாருடையது என கேட்க, பலர் தங்களது கருத்துக்களை சொன்னார்கள். ஆனால் அது ஷபானா வரைந்த ஒரு படம், முன்னதாக ஷபானா ஒரு இதயம் புகைப்படத்தை பகிர்ந்திருக்க அதை பார்த்த சைத்ரா எனக்கு வேண்டும் என கேட்டிருக்கிறார். அதனால் ஷபானா அவருக்கு படம் வரைந்து அனுப்பி இருக்கிறார். அவருடைய இதயம் சைத்ராவிடம் சென்றுவிட்டது எனவும் இதன் மூலம் என்னுடைய படம் வரையும் திறமை வெளியாகி உள்ளது என தோழிகள் நகைச்சுவையுடன் பகிர்ந்து இருக்கின்றனர்.