‘செம்பருத்தி’ ஷபானாவை மிரட்டும் ‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் குடும்பத்தினர்? ஒரே மாதத்தில் பிரிவு!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் மற்றும் “செம்பருத்தி” சீரியல் ஷபானா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
ஆர்யன் ஷபானா ஜோடி:
தமிழ் சின்னத்திரையில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி பலர் இருக்கின்றனர். அந்த வகையில் முன்னணி சீரியல்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் ஷபானா ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஆர்யன் விஜய் டிவியில் “பாக்கியலட்சுமி” சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஷபானா ஜீ தமிழில் “செம்பருத்தி” சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கர்ப்பமான கண்ணம்மா? கலாய்க்கும் ரசிகர்கள்!
இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு வந்தது. ஆனால் இருவரும் காதலில் உறுதியாக இருந்த நிலையில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணத்தை பூவே பூச்சூடவா சீரியல் நாயகி ரேஷ்மா முன் நின்று நடத்தி வைத்தார். இந்நிலையில் திருமணத்திற்கு ஆர்யன் வீட்டில் எதிர்ப்பு வந்த நிலையில் தற்போது வரை ஆர்யன் வீட்டிற்கு ஷபானா செல்லவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
“பாக்கியலட்சுமி” படப்பிடிப்பில் இனியா நேஹா மேனன் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!
திருமணம் முடிந்த கையேடு தேனிலவுக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு இருவரும் சென்ற நிலையில் நான்கு நாட்கள் போட்ட திட்டத்தில் இரண்டு நாட்களில் வந்து விட்டனர். அங்கே என்ன நடந்தது என தெரியவில்லை. இப்போது இருவருக்கும் இடையே மனக்கசப்பு பெரிதாகிக் கொண்டே தான் போகிறது. மேலும் ஆர்யன் வீட்டில் அவருக்கு வேறு பொண்ணு பாத்திருப்பதாக மிரட்டுவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.