தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள் பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளாகுவது அதிகரித்து வருகிறது இந்த நிலையில் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
தமிழக பள்ளிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் மாணவிகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்க அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை கிளை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது மிக முக்கியமான கடமை என்று தெரிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் ஒரு குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது. அதனால் மாணவர்களை பாதுகாப்பது மிகவும் முக்கியம். இதனை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் புகார் குழுக்கள் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் LOC தரவுகளை திருத்த உத்தரவு – நவ.30 முதல் டிச.6 வரை அனுமதி!
Follow our Instagram for more Latest Updates
மேலும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் புதிய சட்டங்களையும், கொள்கைகளையும் அரசு உருவாக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.