தையல் வேலை செய்யும் கதிர் & முல்லை – சுவாரஸ்ய திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!

0
தையல் வேலை செய்யும் கதிர் & முல்லை - சுவாரஸ்ய திருப்பங்களுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்!
தையல் வேலை செய்யும் கதிர் & முல்லை - சுவாரஸ்ய திருப்பங்களுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்!
தையல் வேலை செய்யும் கதிர் & முல்லை – சுவாரஸ்ய திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!

ஏற்கனவே முல்லைக்காக செலவு செய்து ஐந்து லட்ச ரூபாயை திருப்பி தருவேன் என கதிர் கூறியிருந்த நிலையில் தற்போது இரண்டு லட்ச ரூபாயையும் நானே திருப்பி தருகிறேன் என கூறி இருக்கிறார். அந்த கடனை அடைப்பதற்காக கதிரும் முல்லையும் தையல் வேலை பார்க்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி குணமாகி வீட்டிற்கு வருவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கதிரும் முல்லையும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதுமே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்துவிடுகிறது. மூர்த்தியை உடனடியாக மருத்துவமனையில் குடும்பத்தினர்கள் சேர்க்கின்றனர். மூர்த்தியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் மூர்த்திக்கு இதயத்தில் இரண்டு பிளாக் இருக்கிறது எனவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே மூர்த்தியை குணப்படுத்த முடியும் எனவும் கூறுகின்றனர்.

Exams Daily Mobile App Download

இது மட்டுமல்லாமல் மூர்த்தியின் அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வரைக்கும் செலவாகும். எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் பணத்தை செலுத்துகிறார்களோ அவ்வளவு சீக்கிரமாக மூர்த்திக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வது என குடும்பத்தினர் அனைவரும் திண்டாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் தான் மூர்த்தியின் செலவுக்காக இரண்டு லட்ச ரூபாயை தருகிறார்.

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு? அரசு ஆலோசனை!

குடும்பம் இரண்டாகப் பிரிவதற்கு முக்கியமான காரணமாக இருந்த ஜனார்த்தனனிடம் மீண்டும் எப்படி பணத்தை வாங்குவது என குடும்பத்தினர்கள் நினைத்தாலும் மூர்த்தியை தற்போதைக்கு காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இரண்டு லட்ச ரூபாயை வாங்கிக் கொள்கின்றனர். தற்போது மூர்த்திக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து கண் முழித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் மூர்த்தியின் மருத்துவ செலவுக்கான 2 லட்ச ரூபாயை நானே உங்களுக்கு தருகிறேன் என்று ஜனார்தனனிடம் கதிர் சவால்விட்டு கிளம்புகிறார். ஏற்கனவே முல்லைக்கு வைத்தியம் பார்த்த அந்த 5 லட்ச ரூபாயும் திருப்பி கொடுப்பேன் என கதிர் சவால் விட்டிருந்தார். தற்போது மீண்டும் 2 லட்சம் ரூபாயையும் தருகிறேன் எனக் கூறி இருக்கும் நிலையில் கதிரும் முல்லையும் தையல் வேலை பார்த்தாவது அந்த கடனை அடைத்துவிட வேண்டும் என தையல் வேலை பார்க்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!