கழிவுநீரில் பரவும் கொரோனா வைரஸ் ஓமிக்ரான் தொற்று – ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் உருமாறிய வகை ஓமிக்ரான் தொற்று கழிவு நீர் மூலம் பரவுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
கொரோனா பரவல்:
பெரிய வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என அதன் தாக்கம் நீண்டு கொண்டே இருக்கிறது. கடைசியாக இரண்டு அலைகள் உருமாறிய கொரோனா தொற்று எனவும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். இந்த வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.
Exams Daily Mobile App Download
அதில் பெங்களூருவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நகர் முழுவதும் உள்ள கழிவு நீர் ஓடைகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அதிக வீரியம் கொண்ட பி ஏ 2-10 வகை வைரஸ் 14.83 சதவீதம் அளவு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பிஏ 2 வகை வைரஸ் 10.49 சதவீதமும், பி.1-1529 வகை வைரஸ் 5.1 சதவீதம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாதந்தோறும் செலுத்தும் மின் கணக்கீடு திட்டம் எப்போது? அமைச்சர் விளக்கம்
இந்த ஆய்வு முடிவானது பெங்களூரு நகர் முழுவதும் 878 கழிவுநீர் மாதிரிகளை சேகரித்து எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த மே மாதம் பிஏ 2-வகை வைரசின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. மேலும் ஜனவரி மாதம் பிஏ 2-12 வகை வைரசின் தாக்கம் அதிகமாக இருந்தது . இக்காலகட்டத்தில் 7 வகையான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.