சென்னை SETS நிறுவனத்தில் ரூ.1,03,123/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மின்னணு பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் (SETS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள ASP (Purchase Officer), ASP (Stores Assistant) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மின்னணு பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்தில் (SETS) ASP (Purchase Officer) மற்றும் ASP (Stores Assistant) ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்விநிலையத்தில் ஏதேனும் ஒரு Degree, Material Management பாடப்பிரிவில் MBA அல்லது Postgraduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ASP (Purchase Officer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 15 வருடமும், ASP (Stores Assistant) பணிக்கு 10 வருடமும் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,03,123/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். SC / ST / PWD பிரிவினர் மற்றும் பெண்கள் ஆகிய விண்ணப்பதாரர்களிடம் ரூ.250/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.