Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேவை நிறுத்தம்!
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டக் மகிந்திரா அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தனது வங்கி தொடர்பான சேவையை மெயிண்டனன்ஸ் காரணமாக குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு:
இந்தியாவில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது எந்த செயல்பாடுகளுக்கும் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி தற்போது கடைகளில் ஷாப்பிங் செய்தால் கூட டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்யப்படுகிறது. அதன் காரணமாக தற்போது வங்கிகளுக்கு நேரில் சென்று பணம் எடுப்பதோ அல்லது போடுவதோ குறைந்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு வங்கிகளிலும் முறையாக பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது.
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எழுத உள்ளவர்கள் கவனத்திற்கு – OMR Sheet Shading! முழு விபரம் இதோ!
இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வங்கி சேவைகள் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படும். இதனை அனைத்து வங்கிகளும் முறையாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து அதன்பின் செயல்படுத்துகிறது. அதன்படி தற்போது இது தொடர்பாக கோட்டக் மகிந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ளதாவது, அன்புள்ள வாடிக்கையாளருக்கு டெபிட் மற்றும் spendz கார்டு சேவைகளை கீழ்கண்ட நேரத்தில் பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது கோட்டக் மகிந்திரா வங்கியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வங்கி தொடர்பான அனைத்து சேவைகளும் நள்ளிரவு 12 மணியில் இருந்து விடியற்காலை 2.30 மணி வரை மற்றும் 3:30 மணியிலிருந்து 6 மணி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது. அத்துடன் இந்த நேரத்தில் ATMகளில் பணம் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் எந்தவித பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது. இந்த சேவை நிறுத்தம் ஒரு நாளுக்கு மட்டும் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா அல்லது பராமரிப்பு காரணமாக மேலும் நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக கோட்டக் மகிந்திரா வங்கி அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.