ரயில் பயணிகளின் கவனத்திற்கு – பராமரிப்பு பணியால் குறிப்பிட்ட சேவைகள் ரத்து!

0
ரயில் பயணிகளின் கவனத்திற்கு - பராமரிப்பு பணியால் குறிப்பிட்ட சேவைகள் ரத்து!
ரயில் பயணிகளின் கவனத்திற்கு - பராமரிப்பு பணியால் குறிப்பிட்ட சேவைகள் ரத்து!
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – பராமரிப்பு பணியால் குறிப்பிட்ட சேவைகள் ரத்து!

இந்தியாவில் சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சென்னை, பெங்களூரு மற்றும் சென்னை காட்பாடி மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் ரயில் பாதையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இது பற்றி விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

பயணிகள் கவனத்திற்கு:

இந்தியாவில் பொது போக்குவரத்தில் நீண்ட நேரம் பயணிக்க பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமான போக்குவரத்தாக ரயில் பயணம் விளங்குகிறது. அதனால் கொரோனா கால கட்டத்தில் முன்பதிவில்லா சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. அதன்படி டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதன்படி ரயில்வே வாரியமும் பயணிகளுக்கு அமல்படுத்திய கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகளை வழங்கியுள்ளது. ஆனால் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – மே 30 கடைசி நாள்!

தற்போது அனைத்து ரயில்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சென்னை, பெங்களூரு மற்றும் சென்னை காட்பாடி மார்க்கத்தில் உள்ள தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இந்த வழித்தடங்களில் இயங்கும் பல்வேறு ரயில்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் இருந்து புறப்படும் கோவை – சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஒரு பகுதியாக காட்பாடி சென்னை சென்ட்ரல் இடையே நேற்று போல் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் பராமரிப்பு பணிகள் முடியும் வரை இன்னும் 6 நாட்களுக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் காட்பாடி வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வருகிற மே 24, 25 மற்றும் 31ம் தேதிகளிலும், ஜூன் 1, 7, 8ம் தேதிகளிலும் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 6:15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே இயக்கப்படும் என்றும் மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஒரு பகுதி சென்னை சென்ட்ரல் காட்பாடி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!