அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இணையதளம் மூலம் சேவைகள்!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் பொது தரவு அலுவலமாக மாற்றி பொது மக்களுக்கு அரசின் சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
அதிரடி மாற்றம்
சமீப காலமாக வங்கி சேவைகள் துவங்கி அனைத்து வகையான அரசு சேவைகளும் ஆன்லைன் மூலம் எளிதாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ரேஷன் கார்டுகளை பெறுவது, மாற்றங்களை செய்வது உள்ளிட்ட பல வகையான சேவைகள் இப்போது ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நேரங்கள் மிச்சமாகிறது. இந்த ஆன்லைன் சேவைகள் மக்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெற்று வரும் நிலையில் ரேஷன் கடைகளில் சில மாற்றங்களை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை பொது தரவு அலுவலமாக மாற்றி பொது மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் ரேஷன் கடைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 34% ஆக உயரும் அகவிலைப்படி – ஜாக்பாட் அறிவிப்பு!
இப்போது இந்த நடவடிக்கை குறித்து அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் தமிழக அரசின் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ரேஷன் கடைகளை பொது தரவு அலுவலகமாக மாற்ற வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரேஷன் கடைகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளுக்கும் இந்த டிஜிட்டல் சேவைகளை கொண்டு செல்லவும் அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.