தமிழகத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகள் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல்!
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் அரசு திட்டங்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வரின் அறிவுறுத்தல்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு நடந்து வருகிறது. முதல்வர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மாநிலத்திற்கு தேவையான பல நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அரசின் நலத்திட்டங்கள் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பலனளிக்கும் வகையில் வடிவமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அரசின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக இருப்பதால் தமிழக முதல்வர் மக்களிடம் அதிக பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இன்று ஒரே நாளில் 1,986 பேருக்கு கொரோனா உறுதி; 26 பேர் பலி – அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் மனிதவள மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. அந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் அரசு அதிகாரிகளிடம் பல முக்கிய விவரங்களை அறிவுறுத்தியுள்ளார். அதில், குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலம் அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவது மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் அனைத்துத் துறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து அரசு அலுவலர்களின் மனிதவள ஆற்றலை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், அரசு திட்டங்கள் அனைத்தும் மக்கள் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், பவானி சாகரில் உள்ள அடிப்படை பயிற்சி மையத்தில் அரசுப் பணியாளர்களுக்கான பயிற்சியினைக் காணொலிக் காட்சி வாயிலாக இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்துவைத்து, அண்ணா மேலாண்மைப் பயிற்சி மையம் மற்றும் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளை உயர்த்துவைத்து போன்றவை குறித்து முதல்வர் ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்