சீரியல் டூ சினிமா .. அட இவுங்க ரெண்டு பேருமே இனி ஹீரோயின் ஆ – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சினிமாவில் நடித்து விட வேண்டும் என்பதை கனவாக கொண்டுள்ள பலரின் கனவுகளும் அவர்களின் கடின உழைப்பின் காரணமாக நிறைவேறும் என்பது தற்போதும் உறுதியாகியுள்ளது.
சினிமா வாய்ப்பு:
சின்னத்திரை நடிகர்கள், சினிமா வாய்ப்பிற்கான ஒரு ஏணிப்படியாக தான் சீரியலை பயன்படுத்துகின்றனர். இதில், பலரும் வெற்றியை பெற்றும் உள்ளனர். இந்நிலையில், ஒரே கதாபாத்திரத்தில் நடித்த 2 பேர் தற்போது சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளனர். விஜய் டிவியின் மெகா ஹிட் சீரியலாக உள்ள மௌன ராகம் தொடரில் குழந்தை வயது சக்தியாக நடித்த கிருத்திகாவும், மௌனராகம் 2ல் சக்தியாக நடிக்கும் ரவீனாவும் தான் சினிமா பயணத்தில் நுழைந்துள்ளனர்.
மறுமணம் குறித்து மனம் திறந்த நடிகை மீனா.. அவரே சொன்ன விளக்கம்!
Exams Daily Mobile App Download
கிருத்திகா இதுவரை ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அடுத்த படத்தில் மெயின் கதாபத்திரத்தில் நடிப்பதாக கூறி, கடவுளுக்கு நன்றி தெரிவித்து ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். இதேபோல், ரவீனா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், வதனா என்ற படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் இவர்களின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.