பாண்டியன் ஸ்டோர்ஸ் வளைகாப்பிற்கு வரும் மற்ற சீரியல் நடிகைகள் – வெளியான புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தற்போது நாயகி தனத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியின் மற்ற சீரியல் நடிகைகளும் பங்கு கொள்ள இருக்கின்றனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
கூட்டு குடும்ப வாழ்க்கையினை இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் அழகாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் எடுத்து காட்டி வருகின்றனர். இந்த சீரியல் மிகவும் எதார்த்தமான கதைக்களத்துடன் இருந்து வருவதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல ரசிகர்கள் இருந்து வருகின்றனர். கூட்டு குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், சந்தோசங்கள் மற்றும் உறவுகளின் அன்பு என்று அழகாக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் வெண்பா? அவரே கொடுத்த விளக்கம்!
தற்போது அனைவரும் எதிர்பார்த்த கதாநாயகி தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த சீரியலின் ஆரம்பத்தில் இருந்து, ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியினை தான் எதிர்பார்த்து காத்திருந்தனர். மிகவும் கோலாகலமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரை விஜய் தொலைக்காட்சியின் “சூப்பர் சிங்கர்” போட்டியாளர்களான அபிலேஷ், மானசி, ‘ஈரோடு’ மகேஷ் மற்றும் செஃப் தாமு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படியாக இருக்க, இதில் பிற சீரியல் நடிகைகளும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது சமூகவலைத்தளத்தில் ஒரு போட்டோ வெளியாகி உள்ளது. அதில் ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ சீரியல் நடிகை ரக்ஷிதா, ‘தேன்மொழி’ சீரியல் நடிகை ஜாக்குலின், ‘செந்தூர பூவே’ சீரியல் ஸ்ரீ நித்தி ஆகியோர் இருக்கின்றனர். அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடில் இவர்கள் அனைவரும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.