மீண்டும் சினிமாவில் களமிறங்கும் சன் டிவி “வானத்தை போலே” தமன் – ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போலே சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் தமன் குமார். சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்த அவர் மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார். அவரது புகைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தமன் குமார்:
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பின் சின்னத்திரைக்கு சென்றவர் நடிகர் தமன் குமார். அவர் 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் நடிகை பிந்து மாதவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் மூலம் மக்களிடம் பிரபலமானார். அதன் பின் 2013 ஆம் ஆண்டு சும்மா நச்சுனு இருக்கு படத்தில் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி அடையாமல் இருந்ததால் அதன் பின் அவர் படங்களில் நடிக்கவில்லை.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
பிறகு சின்னத்திரையில் களமிறங்கிய அவர் சன் டிவியில் “வானத்தை போலே” சீரியலில் நடித்து வருகிறார். திரையுலக பிரபலங்கள் பலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். காரணம் தொலைக்காட்சி மூலம் மக்கள் மனதில் எளிமையாக இடம் பிடித்துவிடாமல் அதனால் தான். அதே யுக்தியை தமன் குமார் பயன்படுத்தி தற்போது மக்கள் மனதில் புகழ் பெற்று இருக்கிறார். அவர் நடிக்கும் இந்த சீரியலில் அண்ணன் – தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் விதத்தில் இதன் கதைக்களம் அமைந்துள்ளதால் ஏகப்பட்ட குடும்ப ரசிகர்கள் இருக்கின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நடிகர் கமல்ஹாசன் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!!
இந்நிலையில் தமன் குமார் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர் தற்போது கண்மணி பாப்பா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஸ்ரீமணி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தமன், மியாஸ்ரீ , மானஸ்வி, சிங்கம் புலி, போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாகும் என தமன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.