பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி! போலீசார் விசாரணை!
கன்னட மொழியை சேர்ந்த சீரியல் நடிகை செளஜன்யா திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கன்னட திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை தற்கொலை:
கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, வளர்ந்து வரும் நடிகையான இவர் சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார். மேலும் ஓரிரு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
லட்சுமி, ஹேமா மீது பாசத்தை கொட்டும் வெண்பா – பாரதியுடன் சேர திட்டமா?
நடிகை தனது அறையில் தொங்குவதை பார்த்து, கதவை உடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது அடையாளங்களில் ஒன்றாக அவர் தனது காலில் பச்சை குத்தியிருப்பதை போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இறப்பதற்கு முன் நடிகை எழுதிய கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவுக்கு நானே பொறுப்பு. அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். மேலும் தன்னுடைய தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.
வெண்பாவை திருமணம் செய்ய திட்டமிடும் பாரதி? வித்தியாசமான திருப்பங்களுடன் கதைக்களம்!
தான் வாழ்க்கையில் எதிர்கொண்டவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றியும் கூறியுள்ளார். நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.