சின்னத்திரை நடிகர்களான தீபக் & அபி நவ்யா நிச்சயதார்த்தம் – வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சின்னத்திரையில் பிரபலங்கள் பலர் ஒரே சீரியல்களில் நடித்து காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வரிசையில் பல சீரியல்களில் ஒன்றாக இணைந்து நடித்த அபி நவ்யா மற்றும் தீபக் தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நிச்சயதார்த்த புகைப்படங்கள்:
தமிழ் சின்னத்திரையில் பலரும் அறியும் முகமான நடிகர் தீபக் மற்றும் அபி நவ்யா ஜோடி தற்போது காதலித்து வருகின்றனர். செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா, தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகா கதாபாத்திரங்களிலும் நடித்தார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5ன் அடுத்த வனிதா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!
மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி தொடரில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதில் தீபக்கும் இவருடன் இணைந்து நடிக்கிறார். அவ்வாறு நடித்து மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்ய உள்ளனர். அதற்காக உறவினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
பேதி மாத்திரை கலந்த பாலை குடித்த பாலு, யசோதா – இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ!!
அப்போது எடுக்கப்பட்ட நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வரும் நிலையில், சமீபத்தில் தான் ஒரு கடந்த ஆண்டில் கிடைத்த அன்பையும், பாசத்தையும் நினைவு கூர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டாக பதிவிட்டிருந்தார் அபி நவ்யா. மேலும் பல சின்னத்திரை பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.