தமிழகத்தில் இன்று மட்டும் 1,596 பேருக்கு கொரோனா தொற்று; பலி எண்ணிக்கை 21 – அதிகரிக்கும் தொற்று பாதிப்பு!
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பு புதிதாக 1,596 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அறிக்கை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு குறைந்து மீண்டும் இயல்பு நிலை கடந்த சில வாரங்களில் இருந்து தான் மீண்டு வருகிறது. இதனால் கடந்த கல்வியாண்டு முதல் மூடப்பட்டிருந்த கல்வி நிலையங்கள் கூட மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சன்டிவி ‘ரோஜா’ வரை – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,596 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,28,961 பேர் ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,094 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பதிப்பில் இருந்து இன்று 1,534 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,77,646 ஆக உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், தற்போதைய நிலவரப்படி 16,221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,59,684 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,37,48,573 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மட்டும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 186 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்ட்டுள்ளனர். இன்று மாநிலம் முழுவதும் 42060 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24624 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 8258 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றது.