தமிழகத்தில் இன்று 1,575 பேருக்கு கொரோனா உறுதி; 20 பேர் பலி – தமிழக அரசின் அறிக்கை!
தமிழகத்தில் சுகாதாரத்துறை அளித்துள்ள அறிக்கையின் படி புதிதாக 1575 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழு விவரங்கள் குறித்து பதிவில் காண்போம்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் பாதிப்பு கடந்த மாதம் முதல் தினசரி குறைந்து வந்தது. இதனால் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி வந்தது. முன்னதாக தினசரி கிட்டத்தட்ட 2,000 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. தற்போது தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் சுகாதாரத்துறை தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மட்டும் புதிதாக 1,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செப்., 6 முதல் கோவையில் சுற்றுலாத் தலங்களில் அனுமதி – மாவட்ட நிர்வாகத்தின் தகவல்!
இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,21,086 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,610 பேர் தொற்று பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,68,161 ஆக உள்ளது. இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35,000 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,315 ஆகும்.
TN Job “FB Group” Join Now
இன்று ஒரு நாளில் கொரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 1,60,694 ஆகும். இதுவரை மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4,20,60,210 ஆகும். தலைநகரான சென்னையில் 165 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் மருத்துவமனைகளில் சிகிச்சையில் 1727 பேர் உள்ளனர். இன்று மாநிலம் முழுவதும் 43560 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24740 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 8639 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.