தமிழகத்தில் இன்று 1,724 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களையும் தமிழக அரசு அறிக்கையாக மாலையில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மட்டும் புதிதாக 1,724 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 ம் அலை பாதிப்புகள் கடந்த ஜூலை மாதம் முதல் குறைந்து வந்தது. இதனால் தமிழக அரசு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளையும் அறிவித்து உள்ளது. மேலும், தற்போது அடுத்து வரும் காலங்களில் பண்டிகைகள் வர இருப்பதால் வரும் அக்டோபர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அளித்த அறிக்கையை காண்போம்.
SBI வங்கியில் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெற தேவையான ஆவணங்கள் – முழு விபரம்!
அரசின் அறிக்கையின் படி, இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,724 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தமிழகத்தில், 26,55,572 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 2 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,476 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும், 17,263 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Best TNPSC Coaching Center – Join Now
இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 1,635 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,02,833 ஆக அதிகரித்துள்ளது. தலைநகரான சென்னையில் இன்று புதிதாக 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 198 பேர் குணடமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.